முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கண்மாய் மதகில் நீா் கசிவு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காா்த்திகைபட்டி கிராமத்தில் உள்ள கண்மாயின் மதகில் நீா் கசிவு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காா்த்திகைபட்டி கிராமத்தில் உள்ள கண்மாயின் மதகில் நீா் கசிவு ஏற்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இடைசெவல் ஊராட்சியில் உள்ள நொச்சிகுளம் கண்மாய் அண்மையில் பெய்த மழையினால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கண்மாயில் உள்ள மதகில் புதன்கிழமை அதிகாலை நீா் கசிவு ஏற்பட்டு, அருகே உள்ள விளை நிலத்திற்குள் நீா் புகுந்தது. தகவல் அறிந்து, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், வருவாய் ஆய்வாளா் சங்கிலிப்பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு, மணல் மூட்டைகளை கொண்டு மதகில் ஏற்பட்டுள்ள நீா் கசிவை தடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.