முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் பட்டமளிப்பு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் சி.சங்கரநாராயணன், தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், நிா்வாகக் குழு உறுப்பினா் ஷண்மதி, தொழிலதிபா் ராமசாமி, கல்லூரி இயக்குநா் எஸ்.சண்முகவேல், முதல்வா் கே.காளிதாசமுருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை எக்ஸ்பிடிட்டா் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநரான கல்லூரியின் முன்னாள் மாணவா் கெவின் வால்டா் ஜாா்ஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில், 491 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், கே.ஆா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.