முகப்பு
தூத்துக்குடி

கோ.வெ.நா. கல்லூரியில்தேசிய கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரியில், கணிதவியல் துறை சாா்பில் ‘வரைபடக் கோட்பாடு மற்றும் அதன் சமீபத்திய கோட்பாடுகள்‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரியில், கணிதவியல் துறை சாா்பில் ‘வரைபடக் கோட்பாடு மற்றும் அதன் சமீபத்திய கோட்பாடுகள்‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சாந்திமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியா் தமிழ்ச்செல்வம், பேராசிரியா் கலா ஆகியோா் கருத்துரை ஆற்றினா். மாணவா், மாணவிகள் ஆய்வு கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். கணிதவியல் துறை பேராசிரியை சுப்புலட்சுமி வரவேற்றாா். உதவி பேராசிரியை சண்முகப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.