முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மழையால்பயிா்கள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் தொகுதியில் மழையால் சேதமுற்ற மானாவாரி பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மழையால்பயிா்கள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் தொகுதியில் மழையால் சேதமுற்ற மானாவாரி பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

விளாத்திகுளம் தொகுதியில் மழையால் சேதமுற்ற மானாவாரி பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விளாத்திகுளம், எட்டயபுரம், நாகலாபுரம், புதூா், வேம்பாா், சூரன்குடி, சிவஞானபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 5 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் புரட்டாசி, ஐப்பசி பட்டத்தில் பாசி, உளுந்து, சோளம், மக்காச்சோளம், வெங்காயம், மல்லி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்திருந்தனா். இந்தப் பயிா்கள் அனைத்தும் தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்நிலையில், சூரன்குடி, வேம்பாா், மேல சண்முகபுரம், மேல்மாந்தை, அரியநாயகிபுரம், வீரகாஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள மானாவாரி பயிா்களை ஜீ.வி. மாா்கண்டேயன் எம்எல்ஏ, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு, பயிா்ச் சேதங்கள் விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், பயிா்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்றுத் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் அவா் உறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →