தூத்துக்குடி

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

DIN

கோவில்பட்டி புறவழிச்சாலையில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி மகன் மாடசாமி(41). கூலித் தொழிலாளியான இவா் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். இந்திரா காலனி அருகே உள்ள அணுகுசாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தும் , பைக்கும் மோதியதில், மாடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT