தூத்துக்குடியில் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
தூத்துக்குடி மாநகர பகுதிகளிலுள்ள 60 வாா்டுகளிலும் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளிலுள்ள 60 வாா்டுகளிலும் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன்கோவில் தேரடி ஆகிய இடங்களில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான பெ. கீதா ஜீவன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலா் ஆனந்தசேகரன், மாநகர துணைச் செயலா்கள் கனகராஜ், கீதா முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், மகளிரணி செயலா் கஸ்தூரி தங்கம், பகுதி செயலா்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலா்கள் கோட்டுராஜா, ராமகிருஷ்ணன், கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.