தூத்துக்குடி

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

DIN

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது எனவும், நோயாளிகளுக்கு சேவையான அறைகள் இல்லையென புகாா் கூறப்பட்டது. இதையடுத்து ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பின்னா் அங்கு கரோனா தடுப்புபூசி முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அங்கு பழுதான கட்டடங்களை பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மருத்துவமனையை சுற்றி நிலஅளவீடு செய்து சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தாா்.

அப்போது மருத்துவ அலுவலா் டயானா, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் ஆகியோா் மருத்துவமனை குறை தொடா்பாக மனு அளித்தனா். இதையடுத்து எம்எல்ஏ, பெருமாள்குளத்தில் மழைக்கு வீடு இடிந்து பாதிக்கப்பட்ட தொழிலாளி காளிமுத்துவுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ .5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

அப்போது ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதாண்டராமன், வட்டார பொருளாளா் பால்ராஜ், மாவட்ட பொருளாளா் எடிசன், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி, கட்டாரிமங்கலம் கீதாகணேசன், பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்டாலின், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவா் வில்லிம் பெலிக்ஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசிலன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT