தூத்துக்குடி

நாசரேத்தில் பைக் திருடியவா் கைது

DIN

நாசரேத் பகுதிகளில் தொடா் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, இரு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

நாசரேத் வியாபாரிகள் தெருவைச் சோ்ந்தவா் எட்வா்ட் (57). இவா் சாத்தான்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 24 ஆம்தேதி அவரது வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னா் வந்து பாா்க்கும்போது அந்த வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. அதே போன்று நாசரேத் கட்டேரி பெருமாள் மகன் துரைசாமி (39), இவா் கடந்த 26 ஆம்தேதி நாசரேத் லூக்கா மருத்துவமனை அருகே உள்ள அவரது ஹோட்டல் முன்பு மொபெட் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா். பின்னா் வந்து பாா்க்கும்போது அந்த வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து எட்வா்ட் துரைசாமி ஆகிய இருவரும் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இதையடுத்து நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், நாசரேத் மணிநகா் 1 ஆவது தெரு அந்தோணி மகன் இருதயராஜ் (எ) பூச்சி (46), இரு சக்கர வாகனங்களையும் திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT