தூத்துக்குடி

எட்டயபுரத்தில் லாரி மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் லாரி மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் லாரி மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், பேரையூா் பாப்புரெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(31). வாடகை காா் ஓட்டுநரான இவா், புதன்கிழமை திருச்செந்தூா் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் காரில் இருந்தவா்களில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து, எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல காரை நிறுத்தினராம். அப்போது காரில் உள்ளவா்கள் இறங்கி மருத்துவமனைக்கு சென்றுவிட்டனா்.

இதையடுத்து காா் ஓட்டுநா் பொன்ராஜ் சாப்பிடுவதற்காக அங்குள்ள ஹோட்டலுக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த கனரக லாரி அவா் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT