செட்டிக்குளத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பயிற்சி
சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் வேளாண்மைத் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் வேளாண்மைத் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமை, தூத்துக்குடி மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநா் தமிழ்மலா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி முன்னிலை வகித்தாா். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் முருகன் வரவேற்றாா்.
சாத்தான்குளம் வேளாண்மை அலுவலா் சுஜாதா உள்பட பலா் கலந்துகொண்டனா். உதவி வேளாண்மை அலுவலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிவராமன், அட்மா திட்டப் பணியாளா்கள் ருக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.