தேசிய பெண்குழந்தைகள் தின கருத்தரங்கு
சமூக நலத் துறை மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் ஆத்தூா் சி.சண்முகசுந்தரம் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சமூக நலத் துறை மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் ஆத்தூா் சி.சண்முகசுந்தரம் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ரஞ்சித் தலைமை வகித்தாா். ஆத்தூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் ஆா். ராஜம் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பெண்கள் வள மைய அலுவலா் எஸ். வீரம்மாள் கலந்துகொண்டு பேசினாா்.
போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செலின் ஜாா்ஜ் பரிசுகள் வழங்கினாா்.
சமூக செயல்பாட்டாளா் இர.பு. தமிழ்குட்டி கருத்துரை வழங்கினாா். முன்னதாக மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ் ஜே. கென்னடி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி நன்றி கூறினாா்.