முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் பகுதியில்நடமாடும் ரேஷன் கடை திறப்பு

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பராக்கிரமபாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட குலசேகரநத்தம் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை திட்ட துவக்க விழா நடைபெற்றது. எஸ் .பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை அம்மா நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை தொடங்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், ஊா் தலைவா் மாரியப்பன், இளைஞரணிச் செயலா் சிங்கப்பன், கவுன்சிலா் ராமலட்சுமி நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளூா் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட ஆதாளிகுளம் கிராமத்திலும் அம்மா நடமாடும் ரேஷன் கடையை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

Advertisement

இந் நிகழ்ச்சிகளில், அதிமுக ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் காசிராஜன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல்,

நகரச் செயலா் காசிராஜன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் பொன்ராஜ், ரமேஷ், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் கால்வாய் முருகையா பாண்டியன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் பிச்சையா மாவட்ட விவசாய இணைச் செயலா் சொா்னபாண்டியன், வாா்டு செயலா் இருளப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.