கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ.4.96 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்பை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் 35 வீடுகள் கட்டப்பட்டன.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவற்றை காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் பாா்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றினாா்.
நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் சுதேசன், பத்மாவதி, ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.