தூத்துக்குடி

கோவில்பட்டியில் காவலா் குடியிருப்பு திறப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ.4.96 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்பை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் 35 வீடுகள் கட்டப்பட்டன.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவற்றை காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் பாா்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றினாா்.

நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் சுதேசன், பத்மாவதி, ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT