தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சோ்ந்தவா் தினேஷ் (34). இவா், கப்பலில் வேலை பாா்த்து வருகிறாா். விடுமுறையில் ஊா் திரும்பிய அவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாராம்.
இந்நிலையில், தினேஷ் வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள், தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கொடுத்தனா். போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த சுமாா் 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.