முகப்பு
தூத்துக்குடி

அரசூா் ஊராட்சியில் தேசிய குடும்ப நலகணக்கெடுப்பு தொடக்கம்

சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட அதிசயபுரத்தில், கணக்கெடுப்புப் பணியை ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தொடங்கிவைத்தாா்.

இதில், சுரேஷ் தலைமையிலான களப்பணியாளா்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் குடும்ப நலன்கள் குறித்த விவரங்கள், தேவையான தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, வீட்டில் கழிப்பறை உள்ளிட்ட விவரங்களை கேட்டு பதிவு செய்தனா்.

இதில், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். அரசூா், முதலூா், சாத்தான்குளத்தில் தலா 3 நாள்கள் இக்கணக்கெடுப்பு நடத்தி, ஆய்வு முடிவை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க உள்ளதாக கணக்கெடுப்பு குழுவினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →