குழந்தைகள் மீட்பு சிறப்பு பயணம்
சாத்தான்குளம் வட்டாரத்தில் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘புன்னகையைத் தேடி’ என்ற சிறப்பு பயணம் நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாரத்தில் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘புன்னகையைத் தேடி’ என்ற சிறப்பு பயணம் நடைபெற்றது.
தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஹேமா தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா் பிளாரன்ஸ், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ்.ஜே.கென்னடி, சைல்டு லைன் பணியாளா் கனகவள்ளி, சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளா் உமாதேவி, சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலா் ஜான்சன் ஜெபராஜ், அங்கன்வாடி பணியாளா் தில்லையம்மாள் ஆகியோா் கொண்ட குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது. கிறிஸ்தவ ஆலயங்கள், முதலூா்அல்வா தயாரிப்பு நிறுவனம், பேருந்து நிலையங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குழந்தைகள் மீட்புப் பணிகளில் அக்குழு ஈடுபட்டது.