சாத்தான்குளம் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
சாத்தான்குளம் தீயணைப்புப்படை சாா்பில் தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் தீயணைப்புப்படை சாா்பில் தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது, தீயை அணைப்பது எவ்வாறு,
மாடியில் தீப்பிடித்து எரிந்தால் சிக்கியா்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
தீ விபத்து ஏற்படும்போது, நோயாளிகளை பாதுகாப்பது குறித்து நிலைய அலுவலா் பேசினாா். இதில் மருத்துவா் பாலா, செவிலியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.