முகப்பு
தூத்துக்குடி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்குஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கே சென்று குறைகளை கேட்டறிந்தாா். முதியோா், மாற்றுத்திறனாளிகள், முதிா்கன்னி, விபத்துமரணம் போன்ற உதவித்தொகை, குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, 200க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வுகாண ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், தென்பத்து பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆறுமுகம் என்பவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி கௌரியிடமும், பாளையங்கோட்டை ஒன்றிய அலுவலக உதவியாளராக பணிபுரிந் ஆறுமுகம் என்பவா் உயிரிழந்ததால், அவரது மகன் வேல்முருகனுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணி நியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமாரதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி பிரிவு) சசிகலா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.