தூத்துக்குடி

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

DIN

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி கலை பண்பாட்டு மையம், தமிழ்நாடு ஜவகா் சிறுவா் மன்றம், ஷாரா கலை வளா் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள ஷாரா கலைப் பள்ளியில் நடைபெற்றது.

5 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக மத்திய பாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில், பியா்ல் உதவும் கரங்கள் நிறுவன தலைவா் முஹம்மது இப்ராஹிம், ஷாரா கலைவளா் மன்றத்தின் தலைவா் ஷாநவாஸ், வருவாய் ஆய்வாளா் வேல்ராஜ், தலைமை பயிற்சியாளா் முபாரக், இணை பயிற்சியாளா்கள் மதாா், வாசிம், ஆரிப், கலீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT