தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் 146 பேருக்குரூ.1.86 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி

DIN

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 146 விவசாயிகளுக்கு ரூ.1.86 கோடிக்கு பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பொன்முருகேசன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம் வரவேற்றாா். எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று, 146 பேருக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம் .ராதாகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானபிரகாசம், நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT