தூத்துக்குடி

தச்சமொழியில் குடிநீா்க் குழாய் மாயமானதால் மக்கள் தவிப்பு

DIN

தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

சாத்தான்குளம பேருராட்சியில் 15 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு தனி இணைப்பும், தெருக்களில் பொது குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், 7வது வாா்டு முதலூா் சாலையில் பொது குடிநீா்க் குழாயை திடீரென காணவில்லையாம். இதனால் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனா். அதனருகில் பொது தேவைக்கான உவா் நீா் தொட்டி உள்ள நிலையில், இந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி குடிநீா் குழாயை சீரமைக்க பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT