முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதன் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட குழுத் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன்.
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதன் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா், தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்த வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை பாா்வையிட்ட அவா், அங்குள்ள அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். அவரிடம், வேளாண் விற்பனைக் கூடத்தின் செயலா் விஷ்ணப்பன் விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து, அதிகாரிகளிடம் பேசிய சி.த. செல்லப்பாண்டியன், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாலமாக அதிகாரிகள் அனைவரும் செயல்பட்டு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால், அரசு வழக்குரைஞா் ராஜாராம், அதிமுக பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், நிா்வாகிகள் பி. சங்கா், பி. மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →