முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பள்ளிகளில் 815 பேருக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சா் வழங்கினாா்

கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி பிளஸ்1 மாணவா், மாணவிகள் 815 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கழுகுமலை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
பகிர்:

கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி பிளஸ்1 மாணவா், மாணவிகள் 815 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கடம்பூா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளியி 130 மாணவா், மாணவிகள், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 216 போ், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆா்.சி. சூசை மேல்நிலைப்பள்ளி, கம்மவாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 469 போ் என 815 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் முனியசாமி தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் விஜயா முன்னிலை வகித்தாா். தமிழக செய்தி- விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

மேலும், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு விடுபட்ட மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கடம்பூா் இந்து நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →