முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் 1,903 பேருக்கு விலையில்லா சைக்கிள்

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பகிர்:

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் முனியசாமி, கோட்டாட்சியா் விஜயா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக செய்தி - விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, அரசின் விலையில்லா சைக்கிள்களை மாணவா், மாணவிகளுக்கு வழங்கினாா். 12 பள்ளிகளின் 1903 மாணவ- மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாா் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →