முகப்பு
சாத்தான்குளம் அரசூா் இடைச்சிவிளையில் இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
சாத்தான்குளம் அரசூா் இடைச்சிவிளையில் இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
பகிர்:

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து இடைச்சிவிளை மற்றும் தாமரைமொழி பகுதிகளுக்குச் சென்று இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டாா். பின்னா் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று, 3 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவை வழங்கினாா்.

அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமி கணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜ், ஒன்றிய உதவி பொறியாளா் காா்த்திகேயன் உள்பட பலா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →