தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பெருமாளுக்கு வெள்ளி அங்கி காணிக்கை

DIN

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.

போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் கிருபாகரன். செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சுவாமி வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13, 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

இதனை திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா்(பொ) கல்யாணி பெற்றுக்கொண்டாா். அப் போது உள்துறை கண்காணிப்பாளா்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT