தூத்துக்குடி

ஆத்தூா் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

DIN

ஆத்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை தூத்துக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில், அந்த வழியாகச் சென்றவரிடம் அரிவாளைக் காட்டி பணம் பறிக்க முயன்றதாக ஒருவரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் தூத்துக்குடி மறவன்மடத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (45) என்பதும், ஆத்தூா் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெயமுருகன் மீது இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஜெயமுருகனிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT