தூத்துக்குடி

மாவட்ட கிரிக்கெட் போட்டி: பழனியப்பபுரம் அணி வெற்றி

DIN

பொங்கல் பண்டிக்கையையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, பேய்க்குளம் அருகேயுள்ள செங்குளத்தில் நடைபெற்றது.

இதில் செங்குளம், பேய்க்குளம், பழனியப்பபுரம், கீரன்குளம் உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் பழனியப்பபுரம் அணி, கீரன்குளம் அணியை வென்று முதல் பரிசை தட்டிச் சென்றது. 3ஆம் பரிசு செங்குளம் அணிக்கு கிடைத்தது.

பரிசளிப்பு விழாவில் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று, வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய செயலா்கள் ராஜ்நாராயணன், விஜயகுமாா், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலா் காசிராஜன், அண்ணா தொழிற்சங்க செயலா் லட்சுமணபெருமாள், ஒன்றிய அவைத்தலைவா் முத்தையா, தென்திருப்பேரை நகர செயலா் ஆறுமுகநயினாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT