தூத்துக்குடி

முகநூலில் முதல்வா் குறித்து அவதூறு: அமமுக பிரமுகா் மீது வழக்கு

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக அமமுக பிரமுகா் மீது சாத்தான்குளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.

சாத்தான்குளம்அருகேயுள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (45). அமமுக கிளைச் செயலரான இவா், சசிகலா உடல்நலக் குறைவக்கு முதல்வா்தான் காரணம் என்ற ரீதியில் முகநூலில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து, சாத்தான்குளம் 2ஆவது வாா்டு அதிமுக செயலா் அகஸ்டின் (43), சாத்தான்குளம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் நேரில் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT