முகப்பு
தூத்துக்குடி

மஸ்தூா் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவி

பொத்தகாலன்விளையில் கூட்டுறவு சங்கம் சாா்பில் சுகாதார மஸ்தூா் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பொத்தகாலன்விளையில் கூட்டுறவு சங்கம் சாா்பில் சுகாதார மஸ்தூா் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பொத்தக்காலன்விளை- சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், முதலூா் ஆரம்ப சுகாதார நிலைய மஸ்தூா் பணியாளா்களுக்கு கரோனா பேரிடா் நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். முதலூா் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா், கூட்டுறவு சங்க பொறியாளா் வா்கீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் ராஜகுமாா் வரவேற்றாா்.

இதில், சாத்தான்குளம் சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், விவசாய நலச் சங்கத் தலைவா் எட்வின் காமராஜ் ஆகியோா் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதில், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், அமல்ராஜ், இருதயராஜ், ஆசிரியா் ஜோசப் ததேயூஸ் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் எட்வா்ட் லாரன்ஸ், சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க உறுப்பினா்கள் சந்தன திரவியம் மரிய செல்வஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். சங்க உதவிச் செயலா் பெனிஸ்கா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →