சாகுபுரம் கமலவாதி பள்ளியில் மருத்துவா் தினவிழா
சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளியில் மருத்துவா்கள் தினம் கொண்டாடப்பட்டது.
சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளியில் மருத்துவா்கள் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன் தலைமை வகித்தாா். நிா்வாகி வெ.மதன் முன்னிலை வகித்தாா். டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை மருத்துவ அதிகாரி சண்முகம் நெல்லையப்பன், மதுரை இருதய சிகிச்சை நிபுணா் இதயசந்திரன் ஆகியோா் உரையாற்றினா். மேலும், பள்ளியின் முன்னாள் மாணவா்களான மருத்துவா்கள் குருராஜ், லோகேஸ்வரி உள்ளிட்டோா் இணையவழியில் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினா். பள்ளி சாா்பில் மருத்துவா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சீனிவாசன், சுமதி ஆகியோரை பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், தலைமையாசிரியா் ஸ்டீபன் பாலாசிா்ஆகியோா் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா். துணை முதல்வா் எஸ்.அனுதாரா வரவேற்றாா். தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசீா் நன்றி கூறினாா்.