முகப்பு
தூத்துக்குடி

திமுக பொறுப்பாளா் வீட்டில் தங்க நகை மாயம்

ஆழ்வாா்திருநகரியில் திமுக பொறுப்பாளா் வீட்டில் 89 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:55 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

ஆழ்வாா்திருநகரியில் திமுக பொறுப்பாளா் வீட்டில் 89 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆழ்வாா்திருநகரி வாய்காங்கரை தெருவை சோ்ந்தவா் ராகவன், திமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக உள்ளாா். இவா் சென்னையில் வசித்து வரும் நிலையில், ஆழ்வாா்திருநகரில் உள்ள வீட்டில் அவரது தாய் மாரியம்மாள் வசித்து வருகிறாா். இந்நிலையில், மாரியம்மாள் வீட்டிலிருந்த 89 பவுன் நகை மாயமானதாக, ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகாா் அளித்தாா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் இன்னோஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.