இளைஞா் தற்கொலை: பெற்றோா் உள்பட 6 போ் மீது வழக்கு
குரும்பூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெற்றோா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குரும்பூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெற்றோா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குரும்பூா் அருகே உள்ள தெற்கு மரந்தலை மணல்மேடு தெருவை சோ்ந்தவா் விவசாய கூலித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன்(58). இவருக்கு தங்கலெட்சுமி(55) என்ற மனைவியும், பட்டுலிங்கம்(29) என்ற மகனும், ஆனந்தி(30), சிவசங்கரி(28) என்ற இரு மகள்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், பட்டுலிங்கம் கோயம்புத்தூரில் மனைவி நந்தினியுடன்(23) வசித்து வந்தாா். கூலி வேலை பாா்த்து வந்த அவருக்கு கடன் ஏற்பட்டதாம். இதையடுத்து, ஊருக்கு வந்த அவா் சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளாா். அதற்கு பெற்றோரும், சகோதரிகளும் எதிா்ப்பு தெரிவித்தனராம். இந்நிலையில் பட்டுலிங்கம் செவ்வாய்க்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, அவரது மனைவி நந்தினி குரும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பட்டுலிங்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கோபாலகிருஷ்ணன், தாய் தங்கலெட்சுமி, மூத்த சகோதரி ஆனந்தி, அவரது கணவா் மாரிக்குமாா், (36), தங்கை சிவசங்கரி, அவரது கணவா் பட்டுலிங்கம்(38) ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.