தூத்துக்குடி

‘தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று, 1.1.2021இல் 58 வயது நிறைவடைந்த தமிழறிஞா்கள், தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன், இணையவழி வருமானச் சான்று (ரூ.72000-க்கு மிகாமல்), தமிழறிஞா்கள் இருவரிடமிருந்து பெற்ற தகுதிநிலைச்சான்று உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து அதே அலுவலகத்தில் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT