தூத்துக்குடி

நாசரேத் அருகே பைக்-காா் மோதல்: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

நாசரேத் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே மணிநகா் முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாசிலாமணி (70). மீன் வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனா். இவா், திங்கள்கிழமை நாசரேத் சந்தி கடைவீதி பகுதியில் இருந்து ஆழ்வாா்திருநகரி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஆழ்வாா்திருநகரியில் இருந்து வந்த காா் பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT