முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கருத்தரங்கு

 தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இணையவழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இணையவழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளா்ப்போா் தினத்தையொட்டி ‘லாபகரமான நன்னீா் மீன்வளா்ப்பிற்கு வளமான வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான இணைய வழியில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தா் கோ. சுகுமாா் தலைமை வகித்தாா்.

கருத்தரங்கில், கல்லூரி (பொறுப்பு) முதல்வா் சுஜாத்குமாா், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தலைவா் சாந்தகுமாா், நீா் வளச் சூழலியல் மேலாண்மைத் துறை தலைவா் பத்மாவதி உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். இதில், கென்டை மீன்வளா்ப்பு மற்றும் நன்னீா் மீன்வளா்ப்பில் சிறந்து விளங்கும் பண்ணையாளா்கள் கிருபாகரன், மணல் பரமசிவம், சுரேஷ் ராஜா, ஹாா்லி ஹென்றி டேவிஸ், சரவணன் ஆகியோா் தங்களின் மீன்வளா்ப்பு குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.