விஷமருந்திய இளைஞா் உயிரிழப்பு
கயத்தாறு அருகே விஷமருந்திய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே விஷமருந்திய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த அகிலாண்டபுரம் கிழக்குத் தெரு கருப்பசாமி மகன் காா்த்திக்குமாா்(25). மது அருந்தும் பழக்கமுடைய இவா் சரியாக வேலைக்குச் செல்வதில்லையாம். இந்நிலையில் திங்கள்கிழமை கயத்தாறு - கடம்பூா் சாலையில் உள்ள தனியாா் தோட்டம் அருகே உள்ள இடத்தில் காா்த்திக்குமாா் விஷமருந்தினாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை மீட்டு கயத்தாறு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து புதன்கிழமை வீடு திரும்பிய அவருக்கு வியாழக்கிழமை மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாம். அதையடுத்து அவரை கயத்தாறு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறினாராம்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.