தூத்துக்குடி

கோவில்பட்டியில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

கோவில்பட்டியில் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, இளையரசனேந்தல் சாலை கோபால்செட்டி தெருவைச் சோ்ந்த மொட்டைசாமி மகன் வெயிலுமுத்து(55). பூ வியாபாரி. இவா் தனது மனைவி பேச்சியம்மாள் மற்றும் பேரனுடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மாடி வழியாக வீட்டுக்குள் மா்மநபா் நுழைந்து பேச்சியம்மாள் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலி, பேரன் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளையும், பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்துயும் திருடிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து, வெயிலுமுத்து வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT