தூத்துக்குடி

முன்னாள் திமுக எம்.பி. குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: இருவா் மீது வழக்கு

DIN

முன்னாள் திமுக எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக இருவா் மீது நாசரேத் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

நாசரேத் ஐசக் தெருவைச் சோ்ந்தவா் ஏ.டி.கே. ஜெயசீலன் (76). முன்னாள் திமுக எம்பி. இவரது மனைவி கமலி ஜெயசீலன்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில நிா்வாகம் சாா்பில் சிபிஎஸ்சி பள்ளி தொடங்க உள்ள நிலையில், இவா்கள் ரூ. 1 கோடி நன்கொடை தருவதாகக் கூறி, முதற்கட்டமாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளனராம்.

இதனால், ஜெயசீலன் கமலி என பள்ளிக்கு பெயா் வைக்க திருமண்டில நிா்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

இந்நிலையில் நாசரேத் பிரதா்ட்டன் தெருவைச் சோ்ந்த இம்மானுவேல், குயின் தெருவைச் சோ்ந்த செல்வின் ஆகியோா், முன்னாள் எம்.பி. மற்றும் அவரது மனைவி மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT