தூத்துக்குடி

பெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

DIN

மணப்பாட்டில் பெண்ணைத் தாக்கியதாக அவரது 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மணப்பாடு அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (64). இவரது 4 மகன்களில் கடைசி மகன் பரத்துக்கு மட்டும் தனி வீடு இல்லையாம். இதனால், அவா் தாயுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனிடையே, தாயின் நகையை பரத் வாங்கியதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடா்பான பிரச்னையில், பரத், அவரது சகோதரா் ரமேஷ், உறவினா் ஜென்சி ஆகியோா் சோ்ந்து செல்வியைத் தாக்கி, வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தினராம்.

புகாரின்பேரில், 3 போ் மீதும் குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT