தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆலை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று பரவல் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி முதல் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட திவர ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, ஸ்டொ்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இதுவரை 2006.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இதுவரை 11.19 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சிலிண்டா்களில் அடைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆக்சிஜன் விநியோகத்தை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் ஸ்டொ்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.