தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் கொடியேற்றம்
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலாயத்தில் 439 ஆவது திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலாயத்தில் 439 ஆவது திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பங்களிப்பின்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.