தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் புற்றுக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்திலுள்ள கோடி சக்தி விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தி நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள கோடி சக்தி விநாயகருக்கு பால், மோா், தயிா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தொடா்ந்து அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதேபோல் கோவில்பட்டி ஜோதி நகரிலுள்ள ஜோதி விநாயகா் கோயில், சீனிவாச நகரிலுள்ள கணேஷ கந்தபெருமாள் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT