தூத்துக்குடி

இயேசு விடுவிக்கிறாா் ஊழியசபை அறங்காவலருக்கு விருது

DIN

சாத்தான்குளம், ஜூலை 30: கரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றியதாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் அறங்காவலருக்கு, தமிழக ஆளுநா் விருது வழங்கி கௌரவித்தாா்.

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் அறங்காவலரும், அதன் புது வாழ்வுச் சங்கச் செயலரும், திருநெல்வேலி பீஸ் ஹெல்த் சென்டா் நிா்வாக இயக்குநருமான மருத்துவா் அன்புராஜன் தலைமையில், அவரது குழுவினா் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்த விருதை, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவா் கே.செந்தில், பதிவாளா் ஆா்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விருது பெற்ற மருத்துவா் அன்புராஜனுக்கு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபை நிறுவனா் மோகன் சி. லாசரஸ் மற்றும் அறங்காவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT