நாசரேத் பேரூராட்சியில் நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
நாசரேத் பேரூராட்சி மணிநகா், வெள்ளரிக்காயூரணி ஆகிய இடங்களில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தலா 2 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவி செல்வகுமாா் குடிநீா் தொட்டியை திறந்து வைத்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், நகர திமுக துணைச் செயலா் ஜெயசிங், மாவட்டப் பிரதிநிதிகள் முருகதுரை, சாமுவேல், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் அருண்சாமுவேல், இளைஞரணி துணை அமைப்பாளா் சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.