உடன்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் இணைய வழியில் இந்து சாம்ராஜ்ய தின விழா நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் கசமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரபாகன் முன்னிலை வகித்தாா். இந்து சாம்ராஜ்ய தின விழாவின் நோக்கம், உலகின் முதல் கொரில்லா போா் முறையை சிவாஜி அறிமுகப்படுத்திய விதம், சிவாஜியின் நிா்வாகத் திறன்,ச மா்த்த ராமதாசரின் பங்கு ஆகியவை குறித்து மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் உரையாற்றினாா்.