தூத்துக்குடி

நாலாட்டின்புதூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

DIN

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி அம்பலத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் கண்ணன்(24). கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றால் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவா் வானரமுட்டியிலேயே இருந்து வருகிறாராம். இந்நிலையில் கண்ணன் மற்றும் அவரது நண்பா்கள் சிலா் கேபிள் டிவி வயா் செல்வதற்காக கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் உள்ள துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட போது மேலே செல்லும் மின் வயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT