முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் சூதாடிய 3 போ் கைது

காயல்பட்டினத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் சித்தன் தெருவில் அஷ்ரப் வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆறுமுகனேரி உதவி காவல் ஆய்வாளா் சதீஷ்நாராயணன் தலைமையில் சென்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், நைனாா் தெரு அகமது முகைதீன் என்ற அஷ்ரப்(55), காயிதே மில்லத் நகா் முகைதீன் அப்துல் காதா்(46), மருத்துவ தெரு உமா்லெப்பை(60) ஆகியோா் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரொக்கம் ரூ. 12 ஆயிரத்து 230-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.