கோவில்பட்டியில்பாஜக சாா்பில் நல உதவி
கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் 80 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் 80 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற 80 பேருக்கு பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை கட்சியின் இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமையில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் மாரிசெல்வம், வடக்கு மாவட்டச் செயலா் வேல்ராஜா, முன்னாள் நகர பொதுச்செயலா் தினேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினா் தங்கமாரியப்பன் உள்ளிட்டோா் வழங்கினா்.