தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக, நெல்லை மண்டல இணை ஆணையா் அன்புமணி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக இருந்த பா.விஷ்ணுசந்திரன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையராக பதவி வகித்து வரும் அன்புமணி திருச்செந்தூா் கோயிலுக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்செந்தூா் கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியின் கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT